தேசிய இணையப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினென்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் (ஓய்வு) அவர்களின் கீழ் மத்திய அரசு ஒரு நிபுணர்களின் குழுவை அமைத்துள்ளது.
இது சீன நிறுவனமான ஷென்ஹுவா டேட்டா என்ற நிறுவனத்தினால் கண்காணிக்கப்படும் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட இந்திய நாட்டினரைப் பற்றிய அறிக்கைகளை ஆய்வு செய்யவுள்ளது.