உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி எனுமிடத்தில் 3 நாள் அளவிலான ராஷ்ட்ர ரக்சா சம்பர்பன் பர்வ் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
நவம்பர் 19 ஆம் தேதி ராணி லட்சுமி பாயினுடைய பிறந்தநாள் ஆகும்.
அவர் வீரம் மற்றும் மன உறுதியின் உருவகமும், ராஷ்டிர ரக்சா மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் சிறப்பு மிக்க ஒரு தேசிய சின்னமும் ஆவார்.
‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக, ராஷ்ட்ர ரக்சா சம்பர்பன் பர்வ் நிகழ்வானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 17 முதல் நவம்பர் 19 வரை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது உத்தரப் பிரதேச அரசுடன் இணைந்து பாதுகாப்புத் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.