TNPSC Thervupettagam

ரைய்சினா உரையாடல் - 5வது பதிப்பு

January 13 , 2020 1996 days 616 0
  • அரசியலமைப்பின் 19வது பிரிவின் கீழ் இணையத்தைப் பயன்படுத்துவது ஒரு அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றமானது ஜனவரி 10 ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.
  • நீதித்துறை ஆய்வைக் கட்டுப்படுத்தவும் அல்லது நிறுத்தி வைக்கவும் கோரும் எந்தவொரு உத்தரவும் நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
  • இது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பாகும் .
  • உலகின் எந்தவொரு ஜனநாயகத்திலும் ஏற்படுத்தப்பட்ட இணையப் பயன்பாட்டு முடக்கத்தை விட காஷ்மீரில் ஏற்படுத்தப்பட்ட இணையப் பயன்பாட்டு முடக்கமானது மிக அதிக நாட்கள் கொண்டதாகும்.
  • இந்தியாவானது உலகளவில் இணையப் பயன்பாடுகளை முடக்கம் செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இணையப் பயன்பாடுகள் முடக்கக்  கண்காணிப்புக் கூற்றுப்படி, இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் 106 முறைகளும், 2018 ஆம் ஆண்டில் 134 முறைகளும் இணையப் பயன்பாடுகள் முடக்கம் செய்யப் பட்டுள்ளன.

பின்னணி

  • 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டம், 1973 ஆம் ஆண்டு இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1885 ஆம் ஆண்டு தந்திச் சட்டம் ஆகியவை இணையச் சேவைகளை நிறுத்தி வைக்கும் மூன்று சட்டங்களாகும்.
  • ஆனால் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144வது பிரிவின் கீழ் இணையப் பயன்பாடுகள் முடக்கம் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.
  • 2017 ஆம் ஆண்டில் இணையப் பயன்பாடுகளானது "ஒரு அடிப்படை மனித உரிமை" என்று அறிவித்த முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்