TNPSC Thervupettagam

ரோஹிங்கியாக்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

May 12 , 2025 17 hrs 0 min 23 0
  • சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களை டெல்லியில் இருந்து நாடு கடத்துவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
  • இந்த ரோஹிங்கியாக்கள் வெளிநாட்டினர் என்பதால், அவர்கள் மீது வெளிநாட்டினர் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் படலாம்.
  • முகமது சலிமுல்லா & மற்றவர்கள் மற்றும் இந்திய ஒன்றியம் & மற்றவர்கள் (2021) வழக்கின் போது, ​​ 14 மற்றும் 21 ஆகிய சரத்தின் கீழ் உள்ள உரிமைகள் அனைத்து நபர்களுக்கும் (குடிமக்கள் அல்லாதவர்கள் உட்பட) கிடைக்கப் பெறுகின்றன என்பதை உச்ச நீதிமன்றம் எடுத்துரைத்தது.
  • ஆனால் நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமையானது, 19(1)(e)வது சரத்தின் கீழ் உள்ள, வசிப்பதற்கான அல்லது குடியேறுவதற்கான உரிமையின் துணைப் பிரிவு அல்லது அதனுடன் தொடர்புடையது ஆகும்.
  • 1951 ஆம் ஆண்டு அகதிகள் உடன்படிக்கை மற்றும் அதன் மீதான 1967 ஆம் ஆண்டு நெறிமுறையில் இந்தியா கையெழுத்திட்டதில்லை.
  • மேலும், 'அகதிகள்' குறித்த விவகாரங்களை கையாளுவதற்காக இந்தியாவிடம் தனிச் சட்டமும் இல்லை.
  • எனவே, அகதி 'நிலைக்கான' நீதிமன்ற வழக்குகள் ஆனது, இருதரப்புக் கொள்கையின் அடிப்படையில் ஒவ்வொரு வழக்குக்கும் தனித்தனியே பரிசீலிக்கப்படுகின்றன.
  • அகதிகள் 'அயல் நாட்டவர்' மற்றும் 'வெளிநாட்டினர்' என்ற ஒரு வரையறையின் கீழ் வருகிறார்கள்.
  • 1920 ஆம் ஆண்டு கடவுச் சீட்டு (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டத்தின் படி, கடவுச்சீட்டு  மற்றும் நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் இந்தியாவிற்குள் நுழையும் எந்தவொரு வெளிநாட்டினரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிடலாம்.
  • அரசியலமைப்பின் 258(1) மற்றும் 239(1) ஆகிய சரத்துகளின் படி, இந்திய மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களுக்கும் இந்த அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்