அக்டோபர் 03 அன்று நடைபெற்ற லக்கிம்பூர் கெரி வன்முறையை விசாரிக்கும் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவானது, நான்கு விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்ட இந்த நிகழ்வை ஒரு "முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி" என்று விவரித்துள்ளது.
4 விவசாயிகள் மீது காரினை ஏற்றிக் கொன்ற கார் ஆஷிஷ் மிஸ்ராவிற்குச் சொந்தம் என்பதால் இந்த வழக்கில் இவரும் ஒரு முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப் பட்டு உள்ளார்.
ஆஷிஷ் மிஸ்ரா, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெனி என்பவரின் மகன் ஆவார்.