TNPSC Thervupettagam

லடாக் நில மற்றும் வேலைவாய்ப்பு விதிமுறைகள் 2025

June 10 , 2025 2 days 21 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், 2025 ஆம் ஆண்டு லடாக் ஒன்றியப் பிரதேச இட ஒதுக்கீட்டு (திருத்தம்) விதிமுறைகளை அறிவித்தார்.
  • இது 2004 ஆம் ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தில் லடாக்கிற்கு ஏற்றவாறான திருத்தங்களை மேற்கொள்கிறது.
  • பொருளாதார ரீதியாக பின்தங்கியப் பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டைத் தவிர, எந்த வகையிலும் இடஒதுக்கீட்டின் 85% என்ற மொத்த சதவீதத்தினை விட அதிகமாக இருக்கக் கூடாது.
  • அரசு வேலைகளுக்கான மொத்த இட ஒதுக்கீடு இந்த ஒன்றியப் பிரதேசத்தில் தற்போது 95% ஆக உள்ளது என்பதோடு இது நாட்டின் மிக உயர்ந்த இட ஒதுக்கீட்டு அளவில் ஒன்று ஆகும்.
  • மேகாலயா மாநிலத்தில் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங் குடியினர்களுக்கு (SCs/STs) 85% இடஒதுக்கீடும், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பட்டியலிடப் பட்ட பழங்குடியினருக்கு 80% இட ஒதுக்கீடும் உள்ளது.
  • மேலும் பின்வரும் மூன்று விதிமுறைகளும் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்டன:
    • லடாக் அதிகாரப்பூர்வ மொழிகளுக்கான விதிமுறைகள், 2025;
    • லடாக் குடிமைப் பணிகள் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு (திருத்தம்) விதிமுறைகள், 2025; மற்றும்
    • லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு ஆணைய (திருத்தம்) விதிமுறைகள், 2025.
  • "ஆங்கிலம், இந்தி, உருது, போதி மற்றும் புர்கி" ஆகியவை லடாக்கின் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும்.
  • லடாக்கின் பிற தாய்மொழிகளான ஷினா (டார்டிக்), ப்ரோக்ஸ்காட் (டார்டிக்), பால்டி மற்றும் லடாக்கி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் சில சிறப்பு முயற்சிகள் எடுக்கப்படும்.
  • மத்திய அரசு அதிகாரிகளின் குழந்தைகள் உட்பட பிற குடியிருப்பாளர்களும் இங்கு "குடியிருப்போர்" என்று கருதப்பட வேண்டும்.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்ட படி அதன் விதிகள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்க "குடியிருப்போர்" எனும் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற அளவுருக்களைக் குறிப்பிட்டன.
  • ஆனால் அவர்கள் லடாக் பகுதி ஒன்றியப் பிரதேச அந்தஸ்து பெற்ற நாளான 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அந்த ஒன்றியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • முதன்முதலில், மலைப் பாங்கானப் பகுதிகளுக்கான சபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்குச் சுழற்சி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • இந்த விதிமுறைகள் என்பது 1997 ஆம் ஆண்டு லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு ஆணையச் சட்டத்தினை திருத்த உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் ஆரம்ப கால வெற்றிக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் நான்கு முக்கிய குறிப்பிட்ட கோரிக்கைகளுடன் போராட்டங்கள் லடாக்கில் தொடங்கின:
    • லடாக்கிற்கு மாநில அந்தஸ்து,
    • லடாக்கை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்ப்பதன் மூலம் அதற்குப் பழங்குடியின பகுதி அந்தஸ்து வழங்குதல்,
    • உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீடு, மற்றும்
    • லே மற்றும் கார்கிலுக்கு தலா ஒரு பாராளுமன்ற இட ஒதுக்கீடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்