மத்தியப் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், சமீபத்தில் லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் ஒரு வானிலை ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.
லடாக்கில் அமைந்துள்ள முதல் வானிலை ஆய்வு மையம் இதுவாகும்.
இது 3,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிக உயர்ந்த வானிலை ஆய்வு மையமாகும்.
கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, புது தில்லி, சென்னை மற்றும் நாக்பூர் ஆகிய இடங்களில் ஆறு பிராந்திய வானிலை மையங்களை இந்திய வானிலை ஆய்வுத் துறை கொண்டுள்ளது.