சீன அரசானது சமீபத்தில் லித்துவேனியா மீது இறக்குமதி தடைகளை விதித்தது.
அதாவது, சீன நிறுவனங்கள் லித்துவேனியாவிலிருந்து சரக்குப் பொருட்களையோ மூலப் பொருட்களையோ இனி இறக்குமதி செய்யக் கூடாது.
முன்னதாக 2021 ஆம் ஆண்டில், லித்துவேனியா அரசு தாய்வானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரித்து தனது நாட்டில் தாய்வான் அலுவலகம் ஒன்றினைத் திறந்தது.
சீனாவைப் பொருத்தவரையில், தாய்வான் அதன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும்.
லித்துவேனியாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுப்பதற்காகவும் அதன் உலகளாவிய விநியோகச் சங்கிலியை நிறுவத்துவதற்காகவும் சீனா இந்தத் தடையை விதித்துள்ளது.