மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து லேபியோ உரு மற்றும் லேபியோ செகிடா எனப்படுகின்ற இரண்டு புதிதான நன்னீர் வாழ் மீன் இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாய்மரம் போன்ற நீளமான துடுப்புகளின் காரணமாக, பாரம்பரிய பாய்மரப் படகின் பெயரினால் பெயரிடப்பட்ட லேபியோ உரு கேரள மாநிலத்தின் சந்திரகிரி ஆற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
'காகா செகிடா' என்று உள்ளூரில் அறியப்படும் சிறிய, கருமையான உடல் கொண்ட மீன் இனமான லேபியோ செகிடா கேரளாவின் சாலக்குடி ஆற்றில் காணப்படுகிறது.
இந்த இரண்டு இனங்களும், அந்தந்த நதி அமைப்புகளில் மட்டுமே காணப்படுகின்றன.