‘மா கிரிதா கஸ்யஸ்விதானம்’ என்பது லோக்பால் அமைப்பின் புதிய குறிக்கோளாகும். இது ஆங்கிலத்தில் “யாருடைய செல்வத்திற்கும் பேராசை கொள்ளாமல் இருத்தல்” என்று பொருள்படும்.
இது ‘இஷபசோஉபனிஷத்’ என்ற சுலோகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
லோக்பால் அமைப்பிற்காக ஒரு புதிய இலச்சினையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இலச்சினையானது இந்திய சட்டத்தின் படி நீதியை நிலைநாட்டுவதன் மூலம் லோக்பால் அமைப்பானது இந்திய மக்களை எவ்வாறு பாதுகாக்கின்றது மற்றும் கவனித்துக் கொள்கின்றது என்பதைக் குறிக்கின்றது.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் லோக்பால் அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டப் பின்னர் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.
லோக்பால் அமைப்பின் தற்போதையத் தலைவர் ஓய்வு பெற்ற இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஸ் ஆவார்.