TNPSC Thervupettagam

வங்கித் துறையில் உறுதித்தன்மை மற்றும் இலாபம்

December 18 , 2025 15 hrs 0 min 26 0
  • இந்தியாவின் வங்கித் துறையானது வாராக் கடன்களில் (NPA) கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவிலும், சமீபத்திய ஆண்டுகளில் வலுவான இலாப வளர்ச்சியையும் பதிவு செய்தது.
  • மொத்த வாராக் கடன்கள் (NPA) 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2.31% ஆகக் குறைந்துள்ளது என்பதோடு இது கடந்த 20 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும்.
  • நிகர வாராக் கடன் 0.52% ஆகக் குறைந்து, சிறந்த மீட்பு மற்றும் இடர் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது.
  • பொதுத்துறை வங்கிகள் (PSB) 2021 ஆம் ஆண்டில் 9.11% ஆக இருந்த மொத்த வாராக் கடன் அளவை 2025 ஆம் ஆண்டில் 2.58% ஆகக் குறைத்தன.
  • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் (SCB) 2024–25 ஆம் நிதியாண்டில் (FY) 4.01 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியதுடன் வங்கி இலாபம் ஆனது சாதனை அளவை எட்டியது.
  • உள்நாட்டு வைப்புத் தொகை 2015 ஆம் ஆண்டில் 88.35 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 231.90 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • இடர் உண்டாக்கும் சொத்துகள் மீதான மூலதன விகிதம் (CRAR) 2025 ஆம் ஆண்டில் 17.36% ஆக உயர்ந்ததுடன், மூலதன நிறைவுத் தன்மை மேம்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்