வடகிழக்குப் பிராந்தியத்திற்கான முதல் இளைஞர் பரப்புனர்
November 28 , 2018 2669 days 899 0
ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகளுக்கான அவசர நிதியமானது (UNICEF - United Nations International Children’s Emergency Fund) குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராட வடகிழக்குப் பிராந்தியத்திற்கான முதல் இளைஞர் பரப்புனராக (Youth Advocate) அஸ்ஸாமின் பிரபல பாடகியான நஹீத் அப்ரின் (17) என்பவரை நியமித்துள்ளது.
சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் முகவர்களாக தங்கள் குரலை பயன்படுத்துவதற்காக யுனிசெஃப் இளைஞர் பரப்புனர்களை ஈடுபடுத்துகிறது.