சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகளும் கூட்டாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நடுநிலை மண்டலத்தின் ஒரு பகுதியான வடக்கு வஃப்ரா வாரா-புர்கன் தளத்தில் எண்ணெய் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளன.
இது 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், பிரிவினை மண்டலத்திலும் அதன் அருகில் உள்ள ஒரு கடற்கரைப் பகுதியிலும் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப் பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதல் கண்டுபிடிப்பைக் குறிக்கிறது.
நடுநிலை மண்டலம் ஆனது பிரிக்கப் பட்ட மண்டலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இது சவுதி அரேபியாவிற்கும் குவைத்துக்கும் இடையில் சுமார் 5,770 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது என்பதோடு அங்கு இரு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியில் சம உரிமைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.