TNPSC Thervupettagam

வந்தே மாதரம் வழக்கு

July 29 , 2019 2115 days 817 0
  • “ஜன கன மண”விற்கு இணையாக “வந்தே மாதரத்தை” அறிவிக்க மத்திய அரசிற்கு வழிகாட்டுதல் வழங்கக் கோரிய ஒரு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  • வந்தே மாதரம் என்பது 1870 ஆம் ஆண்டில் பக்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட ஒரு வங்க மொழிக் கவிதையாகும். இவர் இதை 1882 ஆம் ஆண்டில் தன்னுடைய நாவலான “ஆனந்தமடத்தில்” இணைத்துள்ளார்.
  • இந்தக் கவிதையானது இரவீந்திரநாத் தாகூரால் பாடலாக மாற்றப்பட்டது.
  • இது இந்திய தேசியக் காங்கிரஸின் 1896 ஆம் ஆண்டின் கல்கத்தா கூட்டத் தொடரின் போது இரவீந்திரநாத் தாகூரால் அரசியல் நோக்கில் பாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்