வன மகோத்சவம் 2026, இந்தியா முழுவதும் 2026 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை வருடாந்திர "காடுகளின் திருவிழாவாக" அனுசரிக்கப்படுகிறது.
இது இந்தியாவின் ஒரு வாரம் நடைபெறும் மரம் நடும் திருவிழாவாகும். இதில் பள்ளிகள், அரசு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் பெருமளவிலான மரம் நடும் இயக்கங்களில் பங்கேற்கின்றனர்.
மரம் வளர்ப்பு மற்றும் காடு வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக அப்போதைய மத்திய வேளாண்மை மற்றும் உணவுத் துறை அமைச்சரான கே.எம். முன்ஷி என்பவரால் 1950-ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.
பருவமழையின் தொடக்கமானது புதிதாக நடப்படும் மரக்கன்றுகளின் உயிர்வாழும் விகிதத்தை அதிகரிப்பதன் காரணமாக இது ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப் படுகிறது.
வன மகோத்சவம் என்பது காடு வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் சமநிலை பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கிறது.