TNPSC Thervupettagam

வனப் பிரகடன மதிப்பீடு 2025

October 20 , 2025 16 hrs 0 min 8 0
  • இந்த அறிக்கையானது வனப் பிரகடன மதிப்பீட்டுக் கூட்டணியால் வெளியிடப்பட்டது.
  • கிளாஸ்கோவில் நடைபெற்ற 26வது பங்குதாரர்கள் மாநாட்டில் (COP26) 2030 ஆம் ஆண்டிற்குள் காடழிப்பு மற்றும் வனச் சீரழிவை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும், உலகளாவிய காடழிப்பு விகிதங்கள் ஆபத்தான அளவில் அதிகமாகவே உள்ளன.
  • 2024 ஆம் ஆண்டில், உலக நாடுகளில் பெரும்பாலும் வெப்ப மண்டலத்தில் 8.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பிலான, அதாவது ஆஸ்திரியாவின் அளவிலான காடுகள் இழக்கப் பட்டன.
  • கால்நடை வளர்ப்பு மற்றும் ஒற்றை வகை பயிர் தோட்டங்கள் உள்ளிட்ட வேளாண்மை நடவடிக்கையானது, கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய காடழிப்பில் சுமார் 86% பங்கினைக் கொண்டுள்ளது.
  • வன இழப்புக்குப் பங்களிக்கும் வேளாண் மானியங்களுக்காக ஆண்டுதோறும் செலவிடப் படும் 409 பில்லியன் டாலரில் வங்களின் வளங்காப்பிற்கான பொது நிதி 1.4% மட்டுமேயாகும்.
  • சரக்குப் பொருட்களின் பயன்பாட்டின் காரணமாக இயக்கப்படும் காடழிப்பு அபாயங்களை ஏற்படுத்தும் நிதி நிறுவனங்களில் 40% மட்டுமே இந்த அபாயங்களை நிவர்த்தி செய்வதற்கும் நிர்வகிப்பதற்குமான கொள்கைகளைச் செயல்படுத்தி உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்