வனப்பரவல் அதிகரிப்புப் பகுதி - இந்தியா
February 3 , 2022
1207 days
559
- காடுகளின் பரப்பினை அதிகரித்த வகையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- 2010 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டிற்கும் 2,66,000 ஹெக்டேர் அளவிலான காடுகள் உருவாகியுள்ளன.
- பொருளாதார விவகாரங்கள் துறையினால் அண்மையில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த தகவலானது தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் மொத்தப் புவியியல் பகுதியில் 24% காடுகளால் சூழப்பட்டுள்ளது.
- உலகில் உள்ள காடுகளில் இந்தியாவின் காடுகள் 2% ஆகும்.
- இந்தக் கணக்கெடுப்பின் படி, பிரேசில், காங்கோ, பெரு மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக பட்ச காடுகளைக் கொண்ட நாடுகள் ஆகும்.
- இந்தியாவிலேயே மத்தியப் பிரதேசம் தான் அதிக காடுகளைக் கொண்டுள்ளது.
- அதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் உள்ளது.
- காடுகளின் அதிகபட்ச விகிதம், அதாவது ஒரு மாநிலத்தின் புவியியல் பகுதியுடன் ஒப்பிடும் போது அதிக வனப்பரவலைக் கொண்ட பகுதிகள் பின்வருமாறு
- மிசோரம்: 85%
- அருணாச்சலப் பிரதேசம்: 79%
- மேகாலயா: 76%
Post Views:
559