TNPSC Thervupettagam

வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையம்

September 2 , 2026 11 days 108 0
  • அசாமின் வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையம் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பின் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
  • காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்திற்கு அருகே உள்ள பன்பாரியில் நிறுவப்பட்ட இந்த மையமானது, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்த காட்டு விலங்குகளை கைகளால் வளர்த்து, சிகிச்சையளித்து, விடுவிப்பதற்காக இந்தியாவின் முதல் பிரத்யேக மையமாகும்.
  • இது அசாம் வனத்துறை, இந்திய வனவிலங்கு அறக்கட்டளை மற்றும் விலங்குகள் நலனுக்கான சர்வதேச நிதியம் ஆகியவற்றால் கூட்டாக நடத்தப்படுகிறது.
  • இந்த மையம் 10,000 க்கும் மேற்பட்ட விலங்குகளை மீட்டுள்ளது மற்றும் அவற்றில் 68% விலங்குகளை மீண்டும் காடுகளில் விடுவித்துள்ளது.
  • மானஸ் தேசியப் பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களை மீண்டும் அறிமுகப்படுத்தவும், ஆசிய கருப்பு கரடிகள், காட்டு எருமைகள் மற்றும் ஹூலக் கிப்பன்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இது உதவியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்