வரதட்சணை ஒழிப்பு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
December 19 , 2025 274 days 345 0
வரதட்சணை ஒழிப்பு என்பது அவசர அரசியலமைப்பு மற்றும் சமூகத் தேவை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
உத்தரப் பிரதேச மாநில அரசு மற்றும் அஜ்மல் பேக் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் வரதட்சணை தடை அதிகாரிகளை (DPO) நியமிக்க நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 304-B (வரதட்சணை மரணம்) மற்றும் பிரிவு 498-A (கொடுமை) ஆகியவற்றின் கீழ் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்றங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
வரதட்சணை தொடர்பான வழக்குகளை முறையாகக் கையாள காவல்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு வழக்கமான பயிற்சி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.