இது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மத்தியக் காச நோய்ப் பிரிவினால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் 24.04லட்சம் காச நோயாளிகள் உள்ளனர். இது 2018 ஆம் ஆண்டு இருந்த எண்ணிக்கையை விட 14% அதிகமாகும்.
நிக்சய் என்ற முறையின் மூலம் காச நோயாளிகளின் அறிவிப்பு வரிசையை இந்தியா முழுவதும் நிறைவு செய்ய இருக்கின்றது.
இந்திய அரசானது “தேசியக் காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்” என்பதனை “தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டம்” என்று மறுபெயரிட்டுள்ளது.
இது, 2025 ஆம் ஆண்டுவாக்கில் நாட்டின் காசநோயை ஒழிப்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
மிகப்பெரிய மாநிலங்களின் வரிசையில் குஜராத் மாநிலமானது சிறப்பாக செயல்படும் மாநிலமாகத் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் இதற்கு அடுத்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை முறையே 2வது மற்றும் 3வது இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.