1860-ஆம் ஆண்டில் இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்குப் பிறகு, பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் நிதி உறுப்பினரான சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் வருமான வரி அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்தியாவில் வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2010 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக வருமான வரி தினத்தை அனுசரித்து வருகிறது.
வரிச் சட்டங்களை எளிமையாக்குவதற்கும் வரி செலுத்துவோரின் வசதியை மேம்படுத்துவதற்கும், வருமான வரிச் சட்டம், 1961-ஐ மாற்றி, வருமான வரிச் சட்டம், 2025 ஆனது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
167-வது வருமான வரி தினம் (2026) என்பது, வருமான வரிச் சட்டம், 2025 அமல்படுத்தப் பட்ட பிறகு நடைபெறும் முதல் கொண்டாட்டமாகும்.