TNPSC Thervupettagam

வரையாடுகளுக்கான புதிய வாழ்விடம்

August 2 , 2026 21 days 105 0
  • கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரையாட்டுமுடி, அழிந்துவரும் நிலையில் உள்ள வரையாடுகளின் (நீலகிரி தார்) முக்கிய வாழ்விடமாக உருவெடுத்துள்ளதுடன், அதன் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
  • வாழ்விடம் மறுசீரமைப்பு முயற்சிகளுக்குப் பிறகு வரையாடுகளின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆக இருந்த நிலையில் தற்போது 150 ஆக உயர்ந்துள்ளது.
  • அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றி, இயற்கை புல்வெளிகளை மீட்டெடுப்பதன் மூலம் 22.5 ஹெக்டேர் பரப்பளவில் கேரள வனத்துறை சூழலியல் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளது.
  • இப்பகுதியின் புல்வெளிகள், சோலை காடுகள், பாறை முகடுகள் மற்றும் குளிர்ந்த பருவநிலை ஆகியன இந்த இனத்திற்கு பொருத்தமான வாழ்விடத்தை வழங்குகின்றன.
  • வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதற்கும் உள்ளூர் பழங்குடியினச் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை வழங்குவதற்கும் ஒரு சூழலியல் சுற்றுலா மலையேற்றத் திட்டத்தையும் முன்மொழிந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்