இந்தியாவின் பருவநிலை நிதி வகைபிரித்தலுக்கான வரைவுக் கட்டமைப்பை பொருளாதார விவகாரத் துறை (DEA) வெளியிட்டுள்ளது.
பருவநிலை நிதிக்கான வகைபிரித்தலை உருவாக்குவதற்கான 2024–25 ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பைத் தொடர்ந்து இது வெளியாகியுள்ளது.
2070 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நிகர சுழி உமிழ்வு இலக்குடன் இணைக்கப்பட்ட பருவநிலை ஆதரவுத் திட்டங்களின் வகைப்பாட்டை வழிநடத்துவதே இந்த வரைவின் நோக்கமாகும்.
இது நீண்ட காலத்திற்கு நம்பகமான மற்றும் மலிவு விலையிலான எரிசக்தி அணுகலை உறுதி செய்வதோடு, பசுமை மாற்றத்தை ஆதரிக்கும்.