TNPSC Thervupettagam

வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம்

September 14 , 2019 2117 days 782 0
  • வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.
  • இது ஆண்டு வருமானம் ரூ 1.5 கோடிக்கு மிகாமல் இருக்கும் கடைக்காரர்கள் / சில்லறை வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும்.
  • இது 18 வயது முதல் 40 வயது வரையில் உள்ளவர்களுக்கான ஒரு திட்டமாகும். இவர்கள் 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக ரூ 3,000 வழங்கப்படும்.
  • மாதாந்திர ஓய்வூதியப் பங்களிப்பில் 50% நிதியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 50% நிதியானது பயனாளியால் வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்