தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் வலசை போகும் பூநாரைகள் பெரிய கூட்டங்களாகக் காணப்படுவதோடு வலசையின் போது அவை இப்பகுதியை உணவு உண்ணும் மற்றும் ஓய்வெடுக்கும் வாழ்விடமாகப் பயன்படுத்துகின்றன.
உயரமான, இளஞ்சிவப்பு நிற நீர்வாழ் பறவைகளான பூநாரைகள் பெரிய குழுக்களாக வாழ்கின்றன, மேலும் ஈரநிலங்கள் மற்றும் கடலோர வாழ்விடங்களில் அவற்றின் உயர்ந்த சமூக நடத்தைக்காக அறியப்படுகின்றன.
அவை ஆழமற்ற உப்பு ஏரிகள், உப்பளங்கள், சேற்றுப் பகுதிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடலோரக் காயல்களில் காணப்படுகின்றன. இந்தியாவில், இவை முக்கியமாக குஜராத் மற்றும் தெற்கு ஈரநிலங்களுக்கு இடையே வலசை போகின்றன.
இந்தியாவில் பெரிய பூநாரை (ஃபோனிகோப்டெரஸ் ரோசியஸ்) மற்றும் சிறிய பூநாரை (ஃபோனிகோனையாஸ் மைனர்) ஆகிய இரண்டு வகையான பூநாரைகள் உள்ளன.
பெரிய பூநாரை அதிகளவில் காணப்படுவதால் IUCN பட்டியலில் 'தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்' என வகைப்படுத்தப் பட்டுள்ளது அதேசமயம் அதிகரிக்கும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் காரணமாக சிறிய பூநாரை 'அச்சுறுத்தல் நிலையை அண்மித்த இனம்' எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், இரு உயிரினங்களும் முக்கியமாக குஜராத்தின் கிரேட் ரான் ஆஃப் கட்ச் பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன, பின்னர் உணவளிப்பதற்கும் மற்றும் குளிர் காலத்தை கழிப்பதற்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள ஈரநிலங்களுக்கு வலசை வருகின்றன.
அவை வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-இல் அட்டவணை II-இன் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.