வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கான சீர்தரச் செயல்பாட்டு நடைமுறை
December 22 , 2024 265 days 201 0
சென்னை உயர் நீதிமன்றம் ஆனது, மிகவும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளை தீர்ப்பதற்கு உதவும் ஒரு சீர்தர செயல்பாட்டு நடைமுறையை (SOP) உருவாக்கியுள்ளது.
பல விவகாரங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்பத்தையும், தேவையற்ற வழக்கு ஒத்தி வைப்புகளைத் தடுப்பதையும் இது மிக நன்கு உறுதி செய்கிறது.
வழக்கறிஞர்கள் நேரடியாக அவரது நீதிமன்ற அதிகாரியிடம் இருந்து வழக்காடல் நேர நிர்ணய சீட்டுகளைப் பெற்று, மதிய உணவு இடைவெளி நேர வழக்காடல்களுக்கு முன்னதாக அவற்றை முன் வைக்கவும், மறுநாளில் புதிய வழக்குகளைப் பட்டியல் இடுவதற்கும் பதிவேட்டில் சமர்ப்பிக்கலாம்.