TNPSC Thervupettagam

வாக்களிப்பு குறித்த ரகசியம் காத்தல்

July 30 , 2021 1476 days 642 0
  • பாராளுமன்றத் தேர்தலோ (அ) மாநில சட்டமன்றத் தேர்தலோ என எதுவாயினும் அதில் வாக்களிப்பு குறித்த ரகசியம் காப்பது அவசியமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • 2013 ஆம் ஆண்டின் குடிமக்கள் சுதந்திரத்திற்கான வழக்கு (2013 Civil Liberties case)  என்ற வழக்கின் தீர்ப்பை மீண்டும்  அது வலியுறுத்தி கூறியுள்ளது.
  • ரகசியம் காப்பது என்பது கருத்துச் சுதந்திரம் எனும் அடிப்படை உரிமையின் ஓர் அங்கம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • மேலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான தேர்தல் ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பினுடைய அங்கங்கள் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
  • அடிப்படை அமைப்பு எனும் கொள்கையானது 1973 ஆம் ஆண்டின் கேசவானந்தா பாரதி எதிர் கேரள மாநில அரசு என்ற வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது.
  • வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் அல்லது கள்ள ஓட்டு போன்றவை ஜனநாயகத்திற்கு எதிரான குற்றங்கள் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்