TNPSC Thervupettagam

வாக்காளர்களுக்கான கைபேசி ஒப்படைப்பு வசதி

May 30 , 2025 10 days 50 0
  • தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே வாக்காளர்கள் தங்களது கைபேசிகளை ஒப்படைப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கான விதிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கும் மேலும் இரண்டு விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
  • இந்த வழிமுறைகள் ஆனது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961 ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு தேர்தல் விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன.
  • ஒரு வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் மட்டுமே கைபேசிகள் அதுவும் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்ட /அணைக்கப் பட்ட நிலையில் மட்டுமே அனுமதிக்கப் படும்.
  • வாக்குச் சாவடிக்குள் வாக்களிப்பு குறித்த இரகசியத்தை உறுதி செய்யும் 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 49Mவது விதி என்பது தொடர்ந்து கண்டிப்பாக அமல்படுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்