தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே வாக்காளர்கள் தங்களது கைபேசிகளை ஒப்படைப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கான விதிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்கும் மேலும் இரண்டு விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த வழிமுறைகள் ஆனது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், 1961 ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு தேர்தல் விதிகளுக்கு இணங்கும் வகையில் உள்ளன.
ஒரு வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் மட்டுமே கைபேசிகள் அதுவும் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்ட /அணைக்கப் பட்ட நிலையில் மட்டுமே அனுமதிக்கப் படும்.
வாக்குச் சாவடிக்குள் வாக்களிப்பு குறித்த இரகசியத்தை உறுதி செய்யும் 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் 49Mவது விதி என்பது தொடர்ந்து கண்டிப்பாக அமல்படுத்தப் படும்.