வாக்காளர்களை மையமாகக் கொண்ட மூன்று புதிய சீர்திருத்தங்கள்
May 6 , 2025 38 days 52 0
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ஆனது, வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தினை மேம்படுத்துவதையும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இந்த முக்கிய முன்னெடுப்புகளில் பின்வருபவை அடங்கும்
இறப்புச் சான்றிதழ்களின் எண்ணிம வழி ஒருங்கிணைப்பு,
வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்குப் புகைப்பட அடையாள அட்டைகளை வழங்குதல், மற்றும்
சிறப்பான தெளிவுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டு.
இந்த நடவடிக்கைகள் வாக்காளர் பட்டியல்களின் மீதான நம்பகத்தன்மையை நன்கு வலுப்படுத்துவதையும், தேர்தல் செயல்முறை முழுவதும் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.