வாக்காளர்கள் மத்தியில் வேட்பாளரின் தனியுரிமைக்கான உரிமை
April 14 , 2024 417 days 339 0
வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் வேட்பாளர்களுக்கு தனியுரிமைக்கான உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
எனவே, வாக்காளர்கள் முழுமையாகப் பகுப்பாய்வு செய்வதற்காக வேட்பாளர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கடந்த கால மற்றும் நிகழ்கால உடைமைகள் குறித்த ஒவ்வொரு தகவல்களையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை.
1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123வது பிரிவின் கீழ் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லாத அல்லது பொது பதவிக்கான வேட்புமனுவிற்குப் பொருத்தமற்ற பல்வேறு விவகாரங்களில் ஒரு வேட்பாளர் தனது தனியுரிமையைத் தக்கவைத்துக்கொள்வது 'ஊழல் நடைமுறை' ஆகாது.
அவ்வாறு வெளிப்படுத்தாதது 1951 ஆம் ஆண்டு சட்டத்தின் 36(4) வது பிரிவின் கீழ் "கருத்தில் கொள்ளக் கூடிய குறைபாடு" ஆகாது எனவும் கூறியுள்ளது.