இந்திய வனவிலங்கு வளங்காவலர் மற்றும் புலிகளுக்கான பாதுகாப்பிற்கு என்று குரல் கொடுக்கும் நாட்டின் ஆர்வலர்களில் ஒருவரான புது தில்லியினைச் சேர்ந்த வால்மீக் தாப்பர் காலமானார்.
'Tiger My Life, Ranthambhore and Beyond' உட்பட வனவிலங்குகள் மற்றும் அதன் வளங்காப்பு குறித்த இரண்டு டஜன் புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
"Land of the Tiger" (1997) என்ற BBC தொடர் உட்பட பல முக்கிய வனவிலங்கு ஆவணப் படங்களையும் தாப்பர் வழங்கியுள்ளார்.
1987 ஆம் ஆண்டில், உள்ளூர்ச் சமூகங்களை பல்வேறு வளங்காப்பு முன்னெடுப்புகளில் ஒருங்கிணைப்பதற்காக வேண்டி பணியாற்றிய ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமான இரந்தம்பூர் அறக்கட்டளையை தாப்பர் நிறுவினார்.