மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் வித்யார்த்தி விக்யான் மன்தன் என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது ஆறாம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களிடையே உண்மையான அறிவியலைப் பிரபலப்படுத்துவதற்காக வேண்டித் தொடங்கப்பட்ட தேசிய அளவிலான ஒரு திட்டமாகும்.
இது டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் வகையில் புது தில்லிக்கான இந்தியாவின் ஒரு மிகப்பெரிய அறிவியல் திறன்சார் ஆராய்ச்சித் தேர்வாகும்.
இது இந்திய அரசின் விக்யான் பிரசார் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்துடன் இணைந்து விஜ்னானா பாரதி (VIBHA - Vijnana Bharathi) என்பதின் ஒரு முன்னெடுப்பாகும்.
VIBHA என்பது பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே அறிவியல் தொழில்நுட்பத்தைப் பரப்புவதற்காகவும் பிரபலப்படுத்துவதற்காகவும் வேண்டி தொடங்கப்பட்ட ஒரு தேசிய இயக்கமாகும்.