வின்கோவ்-19 எனப் பெயரிடப்பட்ட உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவிட்-19 சிகிச்சைக்கான முதல் மருந்தானது விரைவில் பொதுமக்களுக்குக் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் செல்லியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், வின்ஸ் பயோப்ராடக்ட்ஸ் மற்றும் ஹைதராபாத் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து ‘வின்கோவ்-19’ என்ற மருந்தை உருவாக்கி உள்ளன.
இந்த மருந்தை உருவாக்க, SARS-CoV-2 என்ற ஒரு வைரஸ் செயலிழக்கச் செய்யப்பட்டு ஏற்பிகளுக்குள் செலுத்தப்படுகிறது.