மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விமானப் போக்குவரத்து பயண மேலாண்மை (ATFM - Air Traffic Flow Management) மத்திய கட்டுப்பாட்டு மையத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்திலும் விமானப் போக்குவரத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட பயணத்தை உறுதி செய்கின்றது.
மேலும் இது விமான நிலையங்கள், வான்வெளி மற்றும் பயண வழித் தடங்களில் நிலையான தகவல்களுடன் வானிலைத் தகவல்களையும் அளிக்கின்றது.
ATFM-ஐ செயல்படுத்தும் அமெரிக்கா, ஐரோப்பா ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இதனைச் செயல்படுத்தும் 7-வது நாடு இந்தியா ஆகும்.