இந்திய விமான நிலையங்கள் ஆணையமானது (AAI - Airports Authority of India) இந்திய விமானப் போக்குவரத்து மேலாண்மையை நவீனப்படுத்தி, மேம்படுத்துவதற்காக போயிங் நிறுவனத்துடன் தொழில்நுட்ப உதவி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இது விரிவான 10 ஆண்டு தொலை நோக்குப் பார்வை கொண்ட ஒரு ஒப்பந்தமாகும்.
இந்தத் தொலைநோக்குத் திட்டம் அமெரிக்க வர்த்தகம் மற்றும் வளர்ச்சி ஆணையத்திலிருந்து வரும் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.
AAI ஆனது இந்தியா முழுவதும் 125 விமான நிலையங்களைச் சொந்தமாகக் கொண்டு அவ்விமான நிலையங்களை நிர்வகிக்கின்றது.