வர்த்தக அளவின் அடிப்படையில் உலகின் ஒரு மிகப்பெரிய தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டாண்மையானது (RCEP - Regional Comprehensive Economic Partnership) 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இது 10 உறுப்பினர்களைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) மற்றும் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும்.
சீனாவுடன் ஏற்கனவே பரந்த வர்த்தக ஏற்றத்தாழ்வு நிலவும் நிலையில் இந்த ஒப்பந்தம் மேலும் அதிக சீனப் பொருட்களின் நுழைவிற்கு வழிவகுக்கும் என்பதாலும், சில சேவைகளுக்குப் போதுமான அளவு அனுமதி வழங்கத் தவறியதாலும் இந்தியா இந்தக் கூட்டாண்மையில் இருந்து விலகிக் கொண்டது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டும் இந்த கூட்டாண்மையில் உறுப்பினர் இல்லை.