மத்திய உள்துறை அமைச்சகமானது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நம்பகமான பயணிகளின் விரைவான குடியேற்றத்திற்கான (உள் நுழைவு வசதி) திட்டத்தை (FTI-TTP) மேலும் ஐந்து விமான நிலையங்களில் தொடங்கியது.
புதிதாக சேர்க்கப்பட்ட விமான நிலையங்கள் லக்னோ, திருவனந்தபுரம், திருச்சிராப் பள்ளி, கோழிக்கோடு மற்றும் அமிர்தசரஸ் ஆகியனவாகும்.
இந்தத் திட்டமானது முன்னதாக சரிபார்க்கப்பட்ட இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளி நாடு வாழ் இந்திய (OCI) அட்டைதாரர்களுக்கு 30 வினாடி நேரத்திலான குடியேற்ற அனுமதியை வழங்குகிறது.
FTI-TTP ஆனது முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டெல்லி விமான நிலையத்தில் தொடங்கப்பட்டதோடு பின்னர் மும்பை, சென்னை மற்றும் பெங்களூரு உட்பட ஏழு முக்கிய விமான நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தினை நவி மும்பை மற்றும் ஜேவாரில் நிறுவப்பட உள்ள விமான நிலையங்கள் உட்பட 21 விமான நிலையங்களுக்கு விரிவுபடுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
தற்போது இலவசமாக செயல்படுத்தப்படும் FTI-TTP ஆனது பயணிகளின் வசதி மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.