TNPSC Thervupettagam

வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமை (OCI) நெறிமுறைகள்

April 5 , 2021 1502 days 709 0
  • வெளிநாடுவாழ் இந்தியர்கள் குடியுரிமைக்கான (Overseas Citizens of India – OCI) உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பட்டியல் ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.
  • இதற்கு முன்பு இந்த உரிமைகள் 2005, 2007 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் அறிவிக்கப் பட்டுள்ளன.
  • இந்தியாவிற்குப் பயணம் செய்ய OCI அட்டையைக் கொண்டுள்ள இந்திய வம்சாவளி மக்கள்  மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களது புதிய கடவுச்சீட்டு மற்றும் OCI அட்டைகளுடன், பழைய கடவுச்சீட்டினையும் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை.
  • தற்போதுள்ள OCI நெறிமுறைகளின்படி (2005 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது) 20 வயது வரையில் (அ) 50 வயதினை எட்டிய பிறகு OCI அட்டையைக் கொண்டுள்ளவர்களுக்குப்  புதிய கடவுச்சீட்டு பெறும் போது ஒவ்வொரு முறையும் புதிய OCI அட்டை வழங்கப் படும்.
  • இப்போது, OCI அட்டைகளை மீண்டும் பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை கால அவகாசத்தை நீட்டிப்பதற்கு இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்