வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் அவர்கள் ஜியார்ஜியாவிலுள்ள புகழ் பெற்ற திபிலிசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார்.
ஜியார்ஜியாவிற்கான இரண்டு நாள் பயணத்தின் போது, ஜெய் சங்கர் அவர்கள் அந்த நாட்டின் முன்னணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
மேலும் அவர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித ராணி கெட்டீவா (St. Queen Keteva) அவர்களின் நினைவுச் சின்னங்களையும் அங்கு ஒப்படைத்தார்.
ஜியார்ஜியா நாடானது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகியவற்றின் இடைப்பகுதியில் அமைந்துள்ள இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகும்.
குறிப்பு
புனித ராணி கெட்டீவா அவர்கள் தியாகி நிலையை அடைந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜியார்ஜியா நாட்டு ராணி ஆவார்.
இவரது நினைவுச் சின்னங்கள் பழைய கோவா மாநிலப் பகுதியிலுள்ள புனித அகஸ்டைன் பள்ளியில் 2005 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன.