TNPSC Thervupettagam

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் – ஜியார்ஜியா

July 16 , 2021 1427 days 568 0
  • வெளியுறவுத் துறை அமைச்சர் S. ஜெய்சங்கர் அவர்கள் ஜியார்ஜியாவிலுள்ள புகழ் பெற்ற திபிலிசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார்.
  • ஜியார்ஜியாவிற்கான இரண்டு நாள் பயணத்தின் போது, ஜெய் சங்கர் அவர்கள் அந்த நாட்டின் முன்னணித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
  • மேலும் அவர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித ராணி கெட்டீவா (St. Queen Keteva) அவர்களின் நினைவுச் சின்னங்களையும் அங்கு ஒப்படைத்தார்.
  • ஜியார்ஜியா நாடானது கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியா ஆகியவற்றின் இடைப்பகுதியில் அமைந்துள்ள இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாகும்.

குறிப்பு

  • புனித ராணி கெட்டீவா அவர்கள் தியாகி நிலையை அடைந்த 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜியார்ஜியா நாட்டு ராணி ஆவார்.
  • இவரது நினைவுச் சின்னங்கள் பழைய கோவா மாநிலப் பகுதியிலுள்ள புனித அகஸ்டைன் பள்ளியில் 2005 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்