TNPSC Thervupettagam

வெளியேற்ற உத்தரவு மீறல் – சென்னை

February 19 , 2026 4 days 40 0
  • சென்னை பெருநகரக் காவல்துறை பிறப்பித்த வெளியேற்ற உத்தரவை மீறியதற்காக, சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
  • இக்குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க, மெட்ராஸ் நகர காவல் சட்டம் 1888 இன் பிரிவு 51A-ஐ காவல்துறை பயன்படுத்தியது.
  • வெளியேற்ற உத்தரவை மீறியதற்காக ஒருவரை சிறையில் அடைக்க நகர காவல் சட்டத்தின் விதிகள் பயன்படுத்தப்படுவது கிட்டத்தட்ட 25 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
  • ஒரு வெளியேற்ற உத்தரவு, தனிநபர்களின் செயல்பாடுகள் அச்சம், ஆபத்து, நபர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ தீங்கு விளைவிக்கலாம் அல்லது பலவந்தம் அல்லது வன்முறையை உள்ளடக்கியதாக இருந்தால், அவர்களை நகரத்திலிருந்து வெளியேற்ற காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட அனுமதிக்கிறது.
  • சென்னையில் நுழைந்து பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மோசமான ரவுடிகள் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன.
  • மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துதல், பொது அமைதியைப் பாதுகாத்தல், சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல் மற்றும் கடுமையான குற்றச் செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்