TNPSC Thervupettagam

வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டம்

March 9 , 2019 2301 days 734 0
  • வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டத்திற்கு (Flood Management and Border Areas Programme - FMBAP) மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இது 2017-18 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரை எல்லைப்புற பகுதிகள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதையும் நாடெங்கிலும் வெள்ள மேலாண்மை பணிகள் மற்றும் நதி மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
  • திறன்மிகு வெள்ள மேலாண்மை, மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கடல் அரிப்பைத் தடுத்தல் ஆகியவற்றிற்காக நாடெங்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.
  • பொதுப் பிரிவு மாநிலங்களுக்கான நிதி ஆதாரமானது 50% (மத்திய அரசு) : 50% (மாநில அரசு) என்ற நிலையிலும் வட கிழக்கு மாநிலங்கள், சிக்கிம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான நிதி ஆதாரமானது 70 : 30 என்ற நிலையிலும் இருக்கும்.
  • நிதி மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் எல்லைப் புற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆகியவற்றிற்கு 100 சதவிகிதம் மத்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்