TNPSC Thervupettagam

வேளாண் கண்ணோட்ட அறிக்கை

July 11 , 2021 1447 days 588 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வேளாண் கண்ணோட்ட அறிக்கையானது அடுத்து வரவிருக்கும் பத்தாண்டுகளுக்கான உற்பத்தி, நுகர்வு, வர்த்தகம் மற்றும் விலை ஆகியவற்றின் போக்கினைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • ஐக்கிய நாடுகளின்  நிலையான மேம்பாட்டுக் குறியீட்டினை அடைவதற்காக வேண்டி உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதற்கான அரசின் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • வரவிருக்கும் பத்தாண்டுகளில் வேளாண் பொருட்களுக்கான உலகளாவியத் தேவையானது ஆண்டிற்கு 1.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படும் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு நிலையான முறையில் உணவு வழங்குவதற்கு உற்பத்தித் திறன் மேம்பாடுகள் (Productivity improvements) முக்கியமான ஒன்றாகும்.
  • அடுத்த பத்தாண்டில் உலகளாவிய ஒட்டுமொத்த உணவு இருப்பானது 4 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • குறைவான வருமானமுடைய நாடுகளில் உணவு இருப்பானது 3.7% வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்