பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வேளாண் கண்ணோட்ட அறிக்கையானது அடுத்து வரவிருக்கும் பத்தாண்டுகளுக்கான உற்பத்தி, நுகர்வு, வர்த்தகம் மற்றும் விலை ஆகியவற்றின் போக்கினைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டுக் குறியீட்டினை அடைவதற்காக வேண்டி உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை அடைவதற்கான அரசின் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரவிருக்கும் பத்தாண்டுகளில் வேளாண் பொருட்களுக்கான உலகளாவியத் தேவையானது ஆண்டிற்கு 1.2 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படும் வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு நிலையான முறையில் உணவு வழங்குவதற்கு உற்பத்தித் திறன் மேம்பாடுகள் (Productivity improvements) முக்கியமான ஒன்றாகும்.
அடுத்த பத்தாண்டில் உலகளாவிய ஒட்டுமொத்த உணவு இருப்பானது 4 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
குறைவான வருமானமுடைய நாடுகளில் உணவு இருப்பானது 3.7% வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.