இந்திய வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முதல் அமைச்சர்களைக் கொண்ட ஒரு உயர்நிலைக் குழுவை இந்தியப் பிரதமர் அமைத்துள்ளார்.
இக்குழுவின் தலைவராக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இருப்பார்.
கர்நாடகா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான மத்திய அமைச்சர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவார்.