- லட்சத் தீவு யூனியன் பிரதேசத்தின் பங்காராம் தீவில் பவளப் பாறைகளின் நிலை மற்றும் பாதுகாப்பு மீதான சர்வதேசக் கருத்தரங்கு (STAPCOR - 2018) நடத்தப் பட்டது.
- இக்கருத்தரங்கின் கருத்துருவானது, “வாழ்க்கைக்கான பாறைகள்” என்பதாகும்.
- இந்தக் கருத்தரங்கானது
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MOEFCC)
- பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (IUCN)
- சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு
ஆகிய நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தின் (ZSI-Zoological Survey of India) தொழில்நுட்ப உதவியுடன் லட்சத் தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை ஆகியவற்றால் கூட்டாக இணைந்து நடத்தப்பட்டது.
- மேலும் இது 2018 ஆம் ஆண்டை சர்வதேசப் பவளப்பாறை ஆண்டின் மூன்றாவது பத்தாண்டுகளாக அறிவிக்கப்பட்டதுடன் ஒன்றிப் பொருந்துகிறது.
- 2018 ஆம் ஆண்டை சர்வதேசப் பவளப்பாறைகளுக்கான ஆண்டாக சர்வதேசப் பவளப் பாறைகள் முன்னெடுப்பு (ICRI - International Coral Reef Initiative) அறிவித்துள்ளது.