TNPSC Thervupettagam

ஸ்ரேயாஸ் இணைய வாயில்

March 2 , 2019 2324 days 933 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் புதுதில்லியில் தொழில்பழகுநர் மற்றும் திறன்களில் இளைஞர்களின் உயர்கல்விக்கான திட்டம் என்ற ஒன்றைத் துவக்கி இருக்கின்றார்.
  • இது தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை முடிக்கும் பொதுவான பட்டதாரிகளுக்கு தொழிற்சாலை பழகுநர் வாய்ப்புகளை ஏற்படுத்தத் திட்டமிட இருக்கின்றது.
  • ஸ்ரேயாஸ் (Scheme for Higher Education Youth in Apprenticeship and Skills - SHREYAS) என்பது மூன்று மத்திய அமைச்சகங்களின் முன்னெடுப்புகளை உள்ளடக்கிய ஒரு திட்டத் தொகுப்பு ஆகும். அவையாவன :
    • மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம்
    • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
    • தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் (தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம்)
  • ஸ்ரேயாஸ் இணையவாயில் கல்வி நிறுவனங்களையும் தொழிற்துறையையும் இணைய தளத்தில் பதிவு செய்து தங்கள் துறை சார்ந்த தொழிற்பழகுநருக்கான தேவைகளையும் விநியோகத்தையும் வெளிப்படுத்திட இயலச் செய்யும்.
  • இந்த விதிகளுடன் பொருந்திப் போகும் மாணவர்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட தகுதி விதிமுறைகளின் படி தொழிற்பழகுநர் துறைகளைத் தேர்ந்தெடுக்கச் செய்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்