உலக உணவு தினமான அக்டோபர் 16 அன்று மத்திய அரசானது “ஸ்வச் பாரத் யாத்ரா” என்ற தேசிய அளவிலானப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இது பாதுகாப்பான உணவை உண்ணுதல் மற்றும் ஆரோக்கியமாக இருத்தலைப் பற்றி மக்களுக்கு உணர்த்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சாரமானது மாநிலங்களுடன் இணைந்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் ஆணையத்தினால் (Food Safety and Standards Authority of India-FSSAI) தலைமை தாங்கி நடத்தப்படுகிறது.