மான்சுக் மாண்டவ்யா, இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து வழங்கீட்டுத் திட்டம் பற்றிய ஹார்வர்டு ஆய்வறிக்கைகளை வெளியிட்டார்.
இந்த அறிக்கைகளானவை; இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்தின் உருவாக்கக் கதை மற்றும் இந்தியாவின் கோவிட்-19 தடுப்பு மருந்து நிர்வாகத்தின் பயணம் ஆகியனவாகும்
இந்த அறிக்கைகள், நாட்டில் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டது மற்றும் அதன் வழங்கீட்டு முயற்சிகளின் வெற்றிக்குப் பங்காற்றிய சில முக்கிய அம்சங்களை எடுத்துரைக்கிறது.
உள்நாட்டிலேயே தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்தல் மற்றும் பல்வேறு வயதினருக்குப் பாதுகாப்பான முறையில் தடுப்பு மருந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய எடுத்த தக்க நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த அறிக்கைகள் பெரிய அளவில் ஆய்வு செய்துள்ளன.