TNPSC Thervupettagam

ஹீருன் சுயமாக முன்னேறிய உலகின் மிகப்பெரிய செல்வந்தப் பெண்மணிகள் - 2022

April 6 , 2022 1171 days 474 0
  • பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார்-ஷா, நைக்கா நிறுவனத்தின் ஃபல்குனி நாயர் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின்  ராதா வேம்பு ஆகியோர் 2022 ஆம் ஆண்டின்  ஹீருன் சுயமாக முன்னேறிய உலகின் மிகப்பெரிய செல்வம் மிக்க பெண்மணிகள் என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
  • சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த வூ யஜீன் என்ற ஒரு சொத்து மேம்பாட்டு நிபுணர் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • இவரின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலராகும்.
  • நைக்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான ஃபல்குனி நாயர் 7.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் 10 இடங்களில் இடம் பெற்று உள்ளார்.
  • ராதா வேம்பு 3.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 2வது சுயமாக முன்னேறிய செல்வம் மிக்க பெண்மணியாகத் திகழ்கிறார்.
  • ஹீருண் பட்டியலில் இவர் 25வது இடத்தில் உள்ளார்.
  • பயோகான் பயோலாஜிக்ஸ் மற்றும் பயோகான் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிரண் மஜூம்தார்-ஷா 3.8 பில்லியன் டாலர் என்ற அளவிலான சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் 26வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்