‘ஹுனார் ஹாத்’ என்ற ஒரு கண்காட்சியை மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி தில்லியில் திறந்து வைத்தார்.
ஹுனார் ஹாத்தின் கருத்துரு “உள்ளூர் மக்களுக்கான குரல்” என்பதாகும்.
ஹுனார் ஹாத் என்பது சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாரம்பரியப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் ஒரு கண்காட்சி ஆகும்.
பாரம்பரிய கலை / மேம்பாட்டிற்கான கைவினைப் பொருட்களில் திறன்கள் மற்றும் பயிற்சியினை மேம்படுத்துதல் (USTTAD - Upgrading the Skills and Training in Traditional Arts/ Crafts for Development) என்ற திட்டத்தின் கீழ் இது தொடங்கப் பட்டது.