TNPSC Thervupettagam

ஹுருன் இந்தியா அமைப்பின் செல்வ வள அறிக்கை 2025

September 26 , 2025 15 hrs 0 min 15 0
  • இந்தியாவின் முதல் பத்து மில்லியனர் மையங்களில் இரண்டாம் நிலை சார்ந்த ஏழு நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்று 2025 ஆம் ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா அமைப்பின் செல்வ வள அறிக்கை கூறுகிறது.
  • அவை அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், வதோதரா, நாக்பூர், விசாகப்பட்டினம் மற்றும் லக்னோ ஆகியவை வேகமாக வளர்ந்து வரும் மில்லியனர் குடும்பங்களைக் கொண்டு உள்ளன.
  • முதல் பத்து மாநிலங்கள் இந்தியாவின் 79 சதவீதத்திற்கும் அதிகமான மில்லியனர் குடும்பங்களைக் கொண்டுள்ளன என்ற நிலையில் இது குறிப்பிட்ட பிராந்தியங்களில் செல்வக் குவிப்பை எடுத்துக்காட்டுகிறது.
  • மும்பை, புது டெல்லி மற்றும் பெங்களூரு ஆகியவை அதிக எண்ணிக்கையிலான மில்லியனர் குடும்பங்களைக் கொண்ட முதல் மூன்று நகரங்களாக முன்னிலை வகிக்கின்றன.
  • செல்வ வள மேலாண்மை புத்தொழில் நிறுவனங்கள், புதிய வாடிக்கையாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் தற்போது முதல் 18 மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியே இருந்து வருவதாக தெரிவிக்கின்றன.
  • ஜெரோதா மற்றும் க்ரோவ் போன்ற டிஜிட்டல் பங்கு தரகு தளங்களின் 80 சதவீதத்திற்கும் அதிகமான புதிய பயனர்கள் பெருநகரங்கள் அல்லாத நகரங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்